Vishnu Sahasranama Kolangal

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம வாரக்கோலங்கள் 
பெண்களுக்கு கிடைத்த அறியதோர் பொக்கிஷம் !!

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள ஒவ்வொரு நாமாவளியும் மிகவும் சக்தி வாய்ந்தது. அவைகளை மனதார நாவால் உச்சரித்தாலும் அல்லது கையால் எழுதினாலும் நமது ஸகலபாவங்களையும் போக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லது.

அன்றாட பணிச்சுமையின் காரணமாக நம்மால் தினமும் சஹஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்வதற்கோ / எழுத்துவதற்கோ நேரம் இருப்பதில்லை. அவ்வாறு உள்ள பெண்களுக்கு பாராயணம் செய்த பலனை அடைய ஒரு மிகச்சிறந்த வழியை ஓர் பழைய பாராயண புத்தகத்திலிருந்து இந்த பதிவில் அளித்துள்ளோம்.  அனைவரும் அதைப் பின்பற்றி பயனடைந்து தங்கள் வாழ்வில் ஸகலசௌபாக்கியங்களையும் பெற்று இன்பமுடன் வாழ வாழ்த்துகிறோம்!


ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமக் கோலங்கள் 7 நாட்களுக்கும் 7 கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த கிழமைக்குரிய கோலத்தையும் அதன் நாமாவையும்  தினமும் நம் பூஜை அறையில் கால் படாத இடத்திலோ, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும் இடத்திலோ அரிசி மாவினால்  வரைந்து அதன் பலனை அடையலாம். 

1000 நாமாக்களை 7 ஆல்  வகுத்தால் ஒரு நாளைக்கு 143 நாமாக்கள் வரும். அதில் முதல் மற்றும் கடைசி நாமாக்களை ஒவ்வொரு கோலத்தின் உள்ளேயும் எழுதப்பட்டுள்ளது. எனவே ஞாயிறன்று முதல் நாமாவையும் 143 வது நாமாவையும் எழுதினால், முதல் 143 நாமாக்களை முழுவதும் எழுதிய பலன் கிடைக்கும். அதே போன்று மற்ற கிழமைகளிலும் அந்தந்த கோலங்களையும், அதற்குரிய நாமங்களையும் எழுத வேண்டும்.

பெண்கள் மிகவும் அரிதும், புண்ணியமுமான இந்த ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம கோலங்களை தங்கள் இல்லங்களில் வரைந்து அந்த பரந்தாமன் அருளை பெற்று இன்புறுவீர்களாக!

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Sunday

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Monday

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Tuesday

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Wednesday

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Thursday

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Friday

Srustidesign - Vishnu Sahasranama Kolam for Saturday

Post a Comment

0 Comments